சென்னை: தமிழ்நாட்டில் தேர் தலுக்குப் பிறகு அதிமுக அர சுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தால் தான் அதிமுகவை ஆதரிக்கப்போவ தாக தினகரன் தரப்பு எம்எல்ஏ பிரபு தெரிவித்து இருக்கிறார்.
இது, முதல்வர் எடப்பாடிக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
எம்எல்ஏ பிரபு உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சபா நாயகரிடம் புகார் தெரிவிக்கப் பட்டதையடுத்து அந்த மூவருக் கும் விளக்கக் கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது.
இந்தச் சூழலில், பிரபு தெரி வித்து இருக்கும் கருத்து முதல் வருக்குப் புதிய தெம்பாக இருக் கிறது என்று அரசியல் கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் இப்போதைய நிலவரங்களைப் பார்க்கையில் அதிமுக அரசு நீடிக்க ஒவ்வோர் எம்எல்ஏவையும் முக்கியமாகக் கருதவேண்டிய நிலை உள்ளது.