அரவக்குறிச்சி: கரூர் பரமத்தி ஒன்றியம் அரவக்குறிச்சி தொகுதி யில் இடைத்தேர்தல் வாக்களிப்பு நடந்த வேளையில், திமுகவினர் ரூ. 2,000 நோட்டை நகல் எடுத்து வாக்காளர்களுக்கு விநியோகித்த தாக புகார் கிளம்பி இருக்கிறது.
அத்தகைய நகல் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறி முதல் செய்து இருக்கிறார்கள்.
அந்தத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்காக திமுக பரமத்தி ஒன் றியச் செயலாளர் இந்தக் காரியத் தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
வாக்களித்துவிட்டு மாலையில் அந்த நகல் நோட்டைக் கொடுப் போருக்கு ரூ.2,000 தரப்படும் என்று திமுக தரப்பில் அறிவிக்கப் பட்டதாகவும் அந்தச் செய்தி காட் டுத் தீ போல் பரவியதை அடுத்து அதிமுகவினர் அதுபற்றி பறக்கும் படையிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பறக்கும் படையினர், திமுகவினர் விநியோ கித்த ரூ. 2,000 நகல் நோட்டு களைப் பறிமுதல் செய்தனர்.
திமுகவினர் தப்பி ஓடிவிட்ட தாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று செய்தியாளர் களிடம் பேசிய அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்த போக்கு வரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தோல்வி பயத்தால் திமுக மக்களைத் திசை திருப்புகிறது என்றும் அரவக்குறிச்சி, வேலா யுதம்பாளையம் சுற்று வட்டாரங் களில் ரூ. 2,000 நகல்கள் டோக் கன்களாக விநியோகிக்கப்படுவ தாகவும் புகார் தெரிவித்தார்.
அதிமுக இப்படி புகார் தெரி வித்த வேளையில், அரவக்குறிச்சி யில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரைப் பிடித்து திமுகவினர் அவரைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.