புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தின் போது தலைவர்கள் உணவு விஷ யத்தில் எவ்வாறு கவனம் செலுத்தி னர் என்பது குறித்த விவரங்கள் ஊடகங்களில் வெளியானது.
கடந்த இரு மாதங்களாக நாடாளுமன்றத் தேர்தலை முன் னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். சிறிதும் சளைக்காமல் ஒவ்வொரு கிராம மாக வலம் வந்து பிரசாரம் மேற் கொள்ள வேண்டுமெனில் நல்ல உடல்நிலை தேவை என்பதை இத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே, உணவு விஷயத்தில் பெரும்பாலான தலைவர்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந் துள்ளனர். பிரதமர் மோடி பிர சாரத்தின்போது திரவ உணவு மட் டுமே உட்கொண்டுள்ளார்.
பெரும்பாலும் எலுமிச்சை அல் லது ஆரஞ்சு பழரசம் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி அடிக்கடி விரதமும் அனுசரிப்பார். எனவே, அவருக் கான உணவை ஏற்பாடு செய்வதில் பாஜகவினருக்கு எந்தச் சிக்கலும் எழுந்ததில்லை என அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
"காங்கிரஸ் தலைவர் ராகுல் சமோசா பிரியர். இதனால் காங்கி ரசார் அவருக்கு விதவிதமான சமோசாக்களைத் தயார் செய்து வழங்குவர். ஹெலிகாப்டரில் பய ணம் செய்யும்போது கூட கட்சி யினர் தரும் சமோசாக்களை ராகுல் ருசித்துச் சாப்பிடுவார்.
"ஆனால், பிரதமர் மோடியைப் போலவே ராகுலும் அளவோடுதான் சாப்பிடுவார்," என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடு வார் என்கிறார்கள் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர்கள். பிரியங்கா காந்தி பாதாம் பருப்புகளை விரும்பிச் சாப்பிடுவார் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.