இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி திரும்பப் பெற இருப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் 27 இடங்களைப் பெற்ற பாஜக, நாகா மக்கள் முன்னணியின் நான்கு எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் பாஜக ஆட்சி அமைத்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி கட்சித் தலைமை அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாரதிய ஜனதாவுக்கு அளித்து வரும் ஆதரவை அக்கட்சி திரும்பப்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரசுக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே நாகா மக்கள் முன்னணியின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.