சென்னை: பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதால் தம் கட்சியினர் அசாத்தியமாக உழைத்தும் அதற்கேற்ப வாக்குகள் அறுவடையாகவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேத னைப்பட்டார்.
“படித்த இளைஞர்கள் மாற் றத்தை விரும்புகின்றனர். எங்க ளுக்கு வாக்குச் செலுத்தினால் பாஜக வந்துவிடும் என்று திமுக பிரசாரம் செய்தது. ஊடகங்களும் எங்களைப் புறக்கணித்தன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங் களது சின்னத்தை மங்கலாக்கிய போதும் மக்கள் வழங்கிய ஆத ரவை மாற்று அரசியலுக்கான விதையாகத்தான் பார்க்கிறேன்,” என்று சீமான் சொன்னார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக் கான வேலைகளை இப்போதே தொடங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.