‘சறுக்கலே தவிர வீழ்ச்சியல்ல’

ஆலந்தூர்: நாடாளுமன்றத் தேர் தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சறுக்கல்தானே தவிர இது ஒரு பெரிய வீழ்ச்சி என கூற முடியாது என்று தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

“காங்கிரஸ் கட்சி சரியான பாதையில்தான் சென்றுகொண் டுள்ளது,” என்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி கூறினார்.

“தமிழகத்தில் எங்கள் கூட் டணிக்கு நாங்கள் எதிர்பார்த்த தைவிடவும் ஏராளமான அளவில் மக்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.

“அதேவேளையில் தென் இந்தியாவில் வெற்றிபெற்று, வட இந்தியாவில் தோல்வியடைந்து உள்ளோம். வருங்காலத்தில் அங் கும் கட்சியை வளர்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்.

“தோல்வியும் வெற்றியும் தற்காலிகமானது என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார்.

“இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாருமில்லை.

“காங்கிரஸ் கட்சி சிறந்த வெற்றிபெறாத நிலையில் அவர் கட்சியில் இருந்து பதவி விலகுவ தாகக் கூறினால் அதை ஏற்கமுடி யாது. தொண்டர்கள் ராகுல் காந் தியைத்தான் விரும்புகின்றனர்.

“மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்பவே வழங்கப்படும் நிலையில், தமிழகத்தை ஒதுக்கிவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டக்கூடாது. தமிழகத்தில் தாமரை நன்றாக மலரட்டும். ஆனால் தாமரை மலர தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலருமா?” என்று கேட்டார் அழகிரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!