சென்னை: பொய்கள், பொல்லாங்குகளின் துணையுடன், மாய வளையத்தில் மக்களை வரவழைத்து, அவர்களின் வாக்குகளை திமுக கூட்டணி வழிப்பறி செய்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் இந்த வெற்றி தற்காலிகமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் உண்மையையும் நன்மையையும் உணரும்போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது. தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்.
“நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக்கொண்டு மீண்டும் களத்திற்குச் செல்வோம்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.