உத்தரகாண்ட்: காங்கிரசுடன் கடும் போட்டி யிட்டாலும் மிக எளிதாக மகத்தான வெற்றியைப் பெற்று மோடி மீண்டும் பிரதமரா வதை தொடர்ந்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதத்தில் தனது ஆட்டோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் படத்துடன் தன் ஆட்டோ வில் பயணம் இலவசம் என்ற சுவரொட்டியும் ஒட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த ஜமுனா பிரசாத் என்ற ஆட்டோ ஓட்டுநர் பாஜகவின் தீவிர தொண்டர் ஆவார். பாஜகவின் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடி வரும் இவர், பிரதமர் மோடி பதவியேற்கும் வரை தனது பயணிகளிடம் கட்டணம் வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
17வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மறுநாள் 30ஆம் தேதி பிரதமராக மறுபடியும் பதவியேற்க உள்ளார்.
“மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அனைத்து மக்களின் நலனுக் காகவும் பாடுபட்டு வருகிறார். மோடி அவர்கள் பதவியேற்கும் வரை என் ஆட்டோ வில் பயணிப்பவர்களிடம் நான் கட்டணம் வாங்கப் போவதில்லை.” என ஜனமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.