வாரணாசி: அரசியல் களத்தில் நடத்தப்பட்ட அத்தனை கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, மக்களின் வாக்குகள் பாஜகவை அமோக வெற்றிபெறச் செய்துள்ள தாக பிரதமர் நரேந்திர மோடி வார ணாசியில் பேசியபோது தெரிவித்துள்ளார்.
“இந்த நாடு என்னைப் பிரதம ராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு என் றும் ஒரு பணியாளனாகவே இருந்து சேவை ஆற்றுவேன். உங் களது உத்தரவே எனக்கு மிக முக்கியமானது,” என்றார் மோடி.
“பல்வேறு அரசியல் நுணுக்கர் களும் பாஜக இந்த அளவுக்கு மகத்தான வெற்றியைப் பெறும் என்று கணிக்கவில்லை. ஆனால், மக்களுடன் பாஜகவுக்கு இருந்த தொடர்பு இந்த கணிப்புகளைத் தோற்கடித்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்து விட்டது,” என்று வார ணாசியில் நடைபெற்ற நன்றியுரை கூட்டத்தில் மோடி கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. வார ணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட பிரதமர் மோடி 4,79,505 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து, வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரி விப்பதற்காக நேற்று வார ணாசிக்கு வருகை அளித்த மோடி, காசி விசுவநாதர் கோயி லுக்குச் சென்று சிறப்பு வழி பாடுகளை மேற்கொண்டார். பின் னர் வாரணாசியின் கஷ்ட்காலா சங்குல் என்ற பகுதியில் நடை பெற்ற நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அமித்ஷாவும் கலந்துகொண்டார்.