கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தமது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. சில அமைச்சர்களின் துறைகளை மாற்றி மூத்த அமைச்சர்கள் இருவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இம்முறை ஜர்கிராம், புருலியா, பன்குரா பகுதிகளில் மம்தா கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெற வில்லை. எனவே அப்பகுதிகளில் அரசு நலத்திட்டப் பணிகளை வேகப்படுத்துமாறு அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.