மதிய உணவு உண்ட பின் சிலர் உற்சாகமிழந்து தூக்க கலக்கத் தோடு காணப்படுவதுண்டு.
மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற் பட்டு, பணியைச் சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.
மதிய நேர உறக்கம் ஏற்படுவ தற்கு மருத்துவரீதியான காரணிக ளும் அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன.
மதிய உணவுக்குப்பின் உட லின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது.
இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக் கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழுத் தானிய வகைகளைச் சாப்பிடலாம்.
காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வ தன் மூலமாக சர்க்கரையின் அளவைச் சமநிலைப்படுத்தலாம்.
மேலும் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளை களில் சோர்வு நீங்க நடைப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற் கொள்ளலாம்.
தூக்கத்தைத் தூண்டும் மெல டோனின் ஹார்மோன் அளவு உயர் வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக் கத்திற்கு இன்னோர் காரணமாகி றது.
இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில்படும்படி நடக்கலாம். இவ்வாறு செய்வது வைட்டமின் ‘டி’யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.
குளிரூட்டி வசதியுடைய அலு வலக வேலையானது தண்ணீர்த் தாகத்தைக் குறைத்துவிடும்.
இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர்க் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங் கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற நீரிழிவு, ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழ வகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம்.
உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதிப் புரதம் மற்றும் கால் பகுதி முழுத் தானியமாக எடுத்துக் கொள் வதைப் பழக்கமாக்க வேண்டும்.
தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப் பழக்கம், உணவை மென்று உண் ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.