உணவு உற்பத்தியாளர்களுக்காக, குறிப்பாக மாமிச உணவு வகைகளைத் தயாரிப்போருக்கான கரியமில வாயு 2025ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
உணவுத் துறையைக் கருத்தில் கொள்ளாமல் உலக வெப்பநிலையை பாதுகாப்பான அளவில் தக்கவைப்பது சாத்தியமல்ல என்று பிரிட்டனின் பருவநிலை மாற்றத்திற்கான சுகாதார பங்காளித்துவம் வகடந்த வாரம் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இறைச்சி வகைகளை விடுத்து தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களையே மக்கள் சாப்பிடவேண்டும் என்பது இவர்களது பிரசாரம். சர்க்கரைக்கு எதிரான வரிகள், பிளாஸ்டிக் பைகள் மீதான தீர்வை போன்றவை சிறப்பான பலன்களை அளிப்பதாகவும் மாமிசத்திற்கு எதிராக இந்த வரியை விதித்தால் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் ‘மீத்தேன்’ வாயுவின் வெளியீடு குறைக்கப்படலாம் என்கின்றனர்.