மா பிரெமிக்கா
தமிழ் மொழி விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான 28 ஆம் 'தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கு 2016' யீஷூன் தொடக்கக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. 'அடுத்த 50ஆண்டுகளில் - சிங்கையில் தமிழும் தமிழர்களும்' என்கிற கருப்பொருளைச் சார்ந்து இக்கருத்தரங்கை யீஷூன் தொடக்கக் கல்லூரியின் இந்திய கலாசார மன்றம் நடத்தியது. தொடக்கக் கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாண வர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என கிட்டதட்ட 150 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வருகை அளித்த முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் தினகரன், "தமிழ் நமக்கு வாழ்வு அளிக்குமா என்று கேட்பதற்குப் பதிலாக, தமிழ் நமக்கு அளிக்கக்கூடிய கொள்கைகள், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.
யீஷூன் தொடக் கக் கல் லூரி அரங் கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கிய கருத்தரங்கையொட்டி நடந்த 'நீங்கள் தயார் தானே?' என்கின்ற தலைப்பை யொட்டிய ஒரு கலந்துரையாடலை வழிநடத்துகிறார் ஜூரோங் தொடக்கக் கல்லூரியின் தமிழாசிரியர் திரு எஸ்.ஜெகதீசன்.