பார்ட்லி உயர்நிலைப் பள்ளி, வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் 'தமிழ்க் குறுஞ்செயலி உருவாக்கம்' போட்டிக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்வி அமைச்சு, பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தாய்மொழித் துறையின் துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் தலைமை தாங்கி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இந்தப் போட்டிக்கு முதன்மை ஆசிரியர் திருமதி. அல்லி அழகு, மூத்த கல்வித் தொழில்நுட்ப அதிகாரி திரு. ஜெயகுமார், மூத்த பாடத்திட்ட வள மேம்பாட்டு அதிகாரி திரு. கோ.கிருஷ்ண மூர்த்தி, மற்றும் ஜூரோங் தொடக்கக் கல்லூரியின் தாய் மொழிப் பாடத் தலைவர் திரு. ஜெகதீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, சிறந்த பத்து குறுஞ்செயலிகளைத் தேர்ந்தெடுத்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக $1,500, இரண்டாம் பரிசாக $1,000, மூன்றாம் பரிசாக $500 மற்றும் ஏழு ஆறுதல் பரிசாக தலா $100 வெள்ளியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
செயலி உருவாக்கத்தில் முதல் பரிசு வென்ற ராபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள்.
படம்: வளர் தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக்