திமத்தி டேவிட்
புக்கிட் ஹோ சுவீ குடியிருப்புப் பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் பிள்ளைகளின் விளையாட்டுத் திறன்களை வளர்க்க ஊக்கமளிக்கும் முயற்சியில் வெலன்சியா கிளப் டி காற்பந்து அணியினர் அப்பேட்டைக்கு வருகை தந்திருந்தனர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக புக்கிட் ஹோ சுவீ வட்டாரத்தில் வசிக்கும் மற்ற சிறார்களுடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் காற்பந்து விளையாடும் சாய் ராகா வைஷ்ணவி ரகு, 15, அந்த வட்டாரத்தில் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் உள்ள இளம் விளையாட்டாளர்களின் 'புக்கிட் ஹோ சுவீ நைட்ஸ்' காற்பந்து அணித் தலைவியாகவும் திகழ்கிறார் அவர். அலெக்சாண்டர் டூரிச், ஃபாண்டி அகமது, சுந்தரமூர்த்தி போன்ற உள்ளூர் காற்பந்து வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சென்ற வாரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வைஷ்ணவிக்குக் கிட்டியது. அத்துடன், வெலன்சியா அணி யின் வீரர்களைச் சந்தித்து அவர்க ளுடன் விளையாடி, புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டதிலும் அவருக்கு மிகுந்த உற்சாகம்.
சிங்கப்பூரின் பழமைவாய்ந்த குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றான புக்கிட் ஹோ சுவீயில் நிகழ்ந்த தீ விபத்தை முன்னிட்டு 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தோண்டூழிய அமைப்பான 'பியாண்ட்' சமூக சேவை அமைப்பு, அதே வட்டாரத்தில் வளர்ந்த வந்த 'வெலன்சியா கிளப் டி காற்பந்து பீட்டர் லிம்' உபகாரச் சம்பளத்தின் உரிமையாளர் பீட்டர் லிம், சிங்கப்பூர் ஒலிம்பிக் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
வெலன்சியா காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஜாவி ஃபுவேகோ பந்தைக் கையாளும் நேர்த்தியை ஆர்வத்துடன் கவனிக்கிறார் சாய் ராகா வைஷ்ணவி ரகு (வலமிருந்து இரண்டாவது). உடன் இருப்பவர் வெலன்சியா காற்பந்துக் குழுவைச் சேர்ந்த ஜாவுமி டொமினிக் (இடமிருந்து இரண்டாவது).