இன்று அனைத்துலக ரத்த தான தினம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 117,900 யூனிட் ரத்தம் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படுகிறது. ரத்த நன்கொடை வழங்குவதன் வழியாகவே இந்தத் தேவை பூர்த்திசெய்யப்பட முடியும். ரத்தம் தவிர ரத்தத்திலுள்ள 'பிளாஸ்மா' எனப்படும் திரவம், 'பிளேட்லட்' எனப்படும் ரத்தத் தட்டு போன்றவற்றையும் தான மாகத் தரலாம். இவற்றின் தேவை யும் அதிகமாகவே உள்ளது.
ரத்த நன்கொடை வழங்குவோரிடம் பெறப்படும் ஒரு யூனிட் ரத்தம் என்பது சுமார் 450 மி.லி. மட்டுமே. ரத்த நன்கொடை வழங்குவதால் உடல் வலு விழந்து விடுமோ, தொற்றுநோய்கள் ஏற்படுமோ என்ற அச்சம் பலரிடையே இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் ஆரோக்கியமாக இருப்பவரது உடலில் தேவையான அளவு ரத்தம் இயற்கையாகவே சுரக்கிறது. பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் ரத்தம் எடுக்கப்படுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் குறைவே. ரத்த நன்கொடை வழங்கும் போக்கு முன்னேற்றம் கண்டிருந்தாலும் O--=, A=, AB-= போன்ற ரத்த வகைகளின் நன்கொடை சிங்கப்பூரில் மிகவும் குறை வாகவே இருக்கிறது.