வழக்கநிலை நான்காம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தபோது கணக்கியல் பாடத்தில் திவாகரன் கலைவாணன் சிறப்பாக முன்னேறியதைக் கண்ட ஆசிரியர்கள் அந்தப் பாடத்தை அவர் சாதாரணநிலைப் பாடமாக எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தினால் அவருக்குப் பிடித்த கணக்கியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற இயலாமல் போனது. அந்தத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், கணக்கியல் துறையில் உயர் நைடெக் கல்வி பயில எண்ணி தொழில்நுட்ப கல்விக் கழக கிழக்கு வளாகத்தில் சென்ற ஆண்டு சேர்ந்தார் திவாகரன், 18. தற்போது இரண்டாமாண்டு பயிலும் அவர், "உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது கணக்கியல் பாடத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதனை வாழ்க்கைத் தொழில் பாடமாக எடுத்துக்கொள்ள விரும்பினேன்," என்றார்.
அவர் கணக்கியல் பாடத்தில் சிறப்புற முன்னேறியதை அடுத்து அவரது துறைத் தலைவர் புவா மியோ லாங் அவரை யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி வழங்கும் பயிற்சித் திட்டம் ஒன்றில் பங்கேற்கத் தேர்ந்தெடுத்தார். இந்தத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வங்கியியல், நிதித்துறை ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அளிக் கப்பட்டது. "கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட திவாகரன் இந்தத் திட்டத்திற்குப் பொருத்தமானவர் என எண்ணினேன்," என்றார் துறைத் தலைவர் புவா. இரண்டாமாண்டில் அடி யெடுத்து வைத்திருக்கும் யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி, இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்து வதுடன் நிதித்துறையின் முக்கிய அம்சங்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் வகைசெய்கிறது.
திவாகரன் கலைவாணன் (வலது) உள்ளிட்ட 50 மாணவர்களுக்கு பயிற்சித் திட்டத்தின் நிறைவு நாளில் யுபிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கான் சியோ ஆன் (இடது) பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கினார். படம்: யுபிஎஸ் யூத் ஃபைனான்ஸ் அகாடமி