அஷ்வினி செல்வராஜ்
ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் தொடர்பியல் துறை யில் பட்டயக்கல்வியை முடித்த பின்னர், உயர்கல்வியைத் தொடர எண்ணிய ஜெரமியா ஜொயெல் பீட்டர், 23, படித்த துறை சார்ந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வம் கொண் டிருந்தார். அவ்வேளையில், தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளத்தைப் பற்றி அவர் அறிந்துகொண்டார். பட்டப்படிப்பிற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் குடும்பச் சுமையைக் குறைக்க கல்வி உபகாரச் சம்பளம் உதவும் என்று கருதி உடனடியாக விண்ணப்பித்தார் அவர். மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளம், தமிழுடன் உண்டான தொடர்பை மீண்டும் நிலைநாட்ட உதவியுள்ளது என்று கூறினார் ஜெரெமியா ஜோயெல் பீட்டர். "தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளத்தை அமைச்சர் யாக்கூப்பிடமிருந்து பெற்றுக் கொண்ட ஜெரமியா ஜொயெல் பீட்டர் (வலது). படம்: தொடர்பு தகவல் அமைச்சு, கூடுதல் செய்தி: சிவகுருநாதன் ரவீணா