தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் 'மொபைல் அண்ட் நெட்வொர்க்' துறையில் 3.5 'ஜிபிஏ' புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ள 27 வயது பரதராம் மனோகரன், ஆரம்பத்தில் கல்வியில் ஆர்வமில்லாமல் இருந்தவர். உயர்நிலைக் கல்வியை முடித் ததும் பலதுறைத் தொழிற்கல்லூரி ஒன்றில் தகவல் தொடர்பு துறை யில் இரண்டரை ஆண்டுகள் பயின்றார் பரதராம். உறுதியான இலட்சியம் இல்லாதததால் அவரால் தனக்கு உகந்த வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க முடியவில்லை.
அதனால் தகவல் தொடர்பு துறையின் மீது அவருக்கு ஆர்வம் குறைந்தது. தனக்குப் பொருத்தமான துறை இதுவல்ல என்ற முடிவுடன் அந்தப் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டார். பின் ஓராண்டு காலம் பகுதி நேரமாக சில வேலைகளைச் செய்தார். பிறகு சிங்கப்பூர் காவல் துறையில் தேசிய சேவை ஆற்றிய போதுதான் அவருடைய வாழ்க்கை யில் திருப்பம் ஏற்பட்டது.
படம்: பரதராம்