இணையப் பாதுகாப்பு: சிங்கப்பூர் - இந்தியா பங்காளித்துவம்

அறிவார்ந்த வளாகம் எனும் கருப் பொருளைக் கொண்டு புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கும் நோக் கில் அண்மையில் நடைபெற்ற 36 மணி நேர 'ஹெக்கத்தோன்' எனப்படும் இணைய ஊடுருவல் திறன் போட்டியில் சிங்கப்பூரையும் இந்தியாவையும் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இம்மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் (என்டியு) நடந்த முதல் இருநாட்டு 'ஹெக்கத்தோன்' போட்டியில் வெற்றி பெற்ற அணி களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் பரிசுகளை வழங்கினர்.

என்டியுவின் புத்தாக்க தொழில் முனைப்பு நிறுவனமான 'என்டியுடிவ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனமும் தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் பங்கேற்ற தலைசிறந்த புத்தாக்க திட்டத்தை வடிவமைத்த சிங்கப்பூர், இந்தியாவின் தலா ஒரு அணிக்கு $10,000 வழங்கப் பட்டது. என்டியுவின் 'வந்தே அணி'யும் ஐஐடி கரக்பூர் இரண்டாவது அணியும் முதல் பரிசை வென்றன. மாணவர்களிடையே இணக்கத் தையும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதையும் ஊக்கு விக்கும் சமூக கற்றல் தளத்தை மூவர் கொண்ட 'வந்தே' அணி உருவாக்கியது. கடந்த ஆண்டு தேர்வுத் தாட்களுக்கு விரிவுரையாளர்கள் அங்கீகரித்த விடைகளையும் அந்தத்தளம் வழங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!