எஸ்.வெங்கடேஷ்வரன்
தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச் சமுதாயத் திற்காகப் பயன்படுத்த முனைந்து உள்ளனர். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள் பூகிஸ் பகுதியில் அமைந்துள்ள 'டுவோ கெலரியா' என்ற வணிக மையத் தில் தொண்டூழிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறை யைச் சேர்ந்த மொத்தம் சுமார் 20 மாணவர்களும் 10 பணியாளர் களும் இம்முயற்சியில் ஈடுபட் டார்கள். இவர்கள் நான்கு வித மான நுண்கலைப் பயிலரங்கு களை இம்மாதம் 7, 8, 14, 15 தேதிகளில் வழிநடத்தினர். குறிப்பேடுகளை உருவாக்குதல், விலங்குத் தோல்களைக் கொண்டு பொருட்கள் உருவாக்கும் கலை, 'பாப் அப் கார்ட்ஸ்' எனப்படும் அட்டைகள், 'கெலிகிராஃபி' எனப்படும் நவீன கையெழுத்துக் கலை ஆகியவை பற்றிய பயில ரங்குகள் அவை.
அத்துடன், இந்தத் தொண் டூழியர்கள் அவர்களின் கைத் திறனால் உருவாக்கிய பொருட் களை, 'டுவோ கெலரியா'வில் கடை அமைத்து விற்பனை செய்தார்கள்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் அமைத்த கடையில் கைவினைப் பொருட்களை விற்கும் அக்கல்லூரி மாணவி சங்கீதா கனகரத்தினம் (இடது). படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி