தேசிய நூலகத்தில் பன்மொழி கவிதைகளின் சங்கமம் 

தமிழ்க் கவிதைகளை மற்ற மொழிகளிலும் மற்ற மொழிக் கவிதைகளைத் தமிழிலும் அறி முகப்படுத்தும் நோக்கில் நடத் தப்பட்டது இவ்வாண்டின் 'சிங்பொரிமோ' கவிதை சங்கமம் நிகழ்ச்சி.

சிங்கப்பூரில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட கவிதைகளுடன் மற்ற மொழிகளில், மற்ற சூழல் களில் எழுதப்படும் கவிதை களையும் அவற்றின் தன்மையைப் பற்றிய சுவாரஸ்யமான கலந் துரையாடல், நிகழ்ச்சியின் முதல் அங்கமாக அமைந்தது.

இந்தக் கலந்துரையாடலில் பல மொழி கவிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ்க் கவிஞர்கள் அருண் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் அழகப்பன் மெய்யப்ப னுடன் தாய்லாந்து கவிஞர் ஏல் லிம், ஆஸ்திரேலிய கவிஞர் வில்லியம் பியல், மலேசிய இந்திய கவிஞர் மெலிஸாராணி, டி.எஸ்.செல்வா கலந்துரையாட லில் தங்கள் அடையாளங்கள் பற்றியும் மொழி மீதான தொடர் பைப் பற்றியும் பகிர்ந்துகொண் டனர்.

இந்தக் கலந்துரையாடலை இளம் எழுத்தாளர் வட்டத்தின் தலைவர் ஹரிணி வி. வழிநடத்தி னார்.

அதைத்தொடர்ந்து இளம் கவிஞர்கள் தங்களின் கவிதை கள் பற்றியும் அவற்றை எழுதத் தேவைப்படும் தூண்டுதல் பற்றி யும் பகிர்ந்துகொண்டனர்.

பிரியா ரவி, மா பிரெமிக்கா, சுபா‌ஷினி கலைக்கண்ணன்,

சு லோகராஜ் ஆகியோர் இசைக் கேற்ப தங்கள் கவிதைகளைப் படைத்தனர்.

நிகழ்ச்சியில் பானுபிரியா பொன்னரசு அபிநயம் பிடித்துக் கவிதைக்கு அழகு சேர்த்தார்.

தேசிய நூலகத் தமிழ்ப் பிரிவின் இளம் எழுத்தாளர் வட்டம் ஏற்பாட்டில், 'கேளீர்', 'வளர்தமிழ் இயக்கம்' ஆகிய இரு அமைப்புகளின் ஆதரவில் இம்மாதம் 18ஆம் தேதி 'சிங்பொரிமோ' கவிதை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!