செவிப்புலன் குறைபாடு இருப்பவர் களில் கேட்கும்திறனை அளிக்கும் கருவிகளைப் பயன்படுத்த தயக் கம் காட்டுவோர், கேட்கும்திறன் குறைபாட்டுக்கும் ஞாபக மறதி நோய்க்கும் தொடர்பிருப்பதை அறிவதில்லை.
திரு துரைசாமி பிள்ளைக்கு 67 வயதாக இருந்தபோது அவரது செவிப்புலன் பாதிக்கப்பட்டிருப் பதாக அவரது மனைவி கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை அவர். கேட்க உதவும் கருவியைப் பயன்படுத்துமாறு நிபுணர் அறிவுறுத்தியதையும் அவர் பொருட்படுத்தவில்லை.
ஆனால், நான்காண்டுகளுக் குப் பிறகு அழுதுகொண்டிருந்த ஒரு சிறுமி கூறியதைக் கேட்க முடியாமல் போனதையும் அதனால் அச்சிறுமிக்கு உதவமுடியாமல் போனதையும் அடுத்து வருந்திய திரு துரைசாமி கேட்க உதவும் கருவியைப் பொருத்திக்கொண் டார்.
சிங்கப்பூரில் இது பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. செவிப்புலன் குறைபாடுள்ளோரில் 3.3 விழுக்காட்டினர் மட்டுமே கேட்கும்திறன் கருவியை அணிந்துகொள்கின்றனர் என டான் டோக் செங் மருத்துவமனை யின் காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஹோ இயூ சின் கூறினார்.
ஒப்புநோக்க, இங்கிலாந்தில் 38.6 விழுக்காட்டினரும் ஜப்பானில் 14.1 விழுக்காட்டினரும் கேட்க உதவும் கருவியைப் பயன்படுத்து கின்றனர்.
அறுபதுகளில் இருக்கும் 10 விழுக்காட்டினர் கூட்டமான இடங் களில் கேட்கும்திறன் குறைபாட் டால் சிரமப்படுவதாக மருத்துவர் ஹோ கூறியுள்ளார்.
கேட்கும்திறன் இழப்பு ஞாபக மறதி நோயுடன் தொடர்புள்ளதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேட்கும்திறன் இழப்புக்கு சிகிச்சை அளித்தால், தவிர்க்கக் கூடிய வகையிலான ஞாபகமறதி நோயுள்ளவர்களில் 25 விழுக்காட் டினர் பயனடைவர் என்று கூறப் படுகிறது. இதுகுறித்த விழிப்பு உணர்வை நோயாளிகள், மருத்து வர்களிடையே ஏற்படுத்த வேண் டும் என்றார் மருத்துவர் ஹோ.
கேட்கும்திறன் இழப்புள்ளோ ரில் 73.2 விழுக்காட்டினர் தங்க ளுக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே கருதுவதில்லை என்று 2010ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட தேசிய சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.
கேட்கும்திறன் கருவிகள் சத்தமாக இருப்பதும் அதன் விலை அதிகமாக இருப்பதும் அவற்றை நோயாளிகள் பயன் படுத்தாமல் இருப்பதற்குக் கார ணம் என்று மருத்துவர் ஹோ கூறினார். ஆனால், கேட்கும்திறன் இழப்பு காரணமாக சத்தமான ஒலி களை வடிகட்டும் செயல்பாட்டை அவர்களது மூளை சரிவரச் செய்யாததாலேயே கருவிகளைப் பொருத்தும்போது அந்த ஒலிகள் பிரச்சினையாகத் தெரிகின்றன என்றார் மருத்துவர் ஹோ.
கருவி அணியத் தாமதித்தால் இந்தப் பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்கிறார் அவர். அதேபோல, கருவிகளை வாங்கு வதற்கு அரசாங்க உதவிகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.