ஸ்ரீநகர்: அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெளியேறியதை அடுத்து ஸ்ரீநகர் என்ஐடி வளாகத்தில் உள்ளூர், வெளிமாநில மாணவர்களுக்கு இடையே இம்மாதம் முதல் தேதி மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வளாகத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையால் வகுப்புகள் நடைபெறவில்லை; அங்கு பதற்றம் நிலவியது. நேற்று முன்தினம் இரவு சில மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் போலி சாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலிசார் மோசமாகத் தடியடி நடத்தியதாகக் கூறப் படுகிறது. கல்லூரி வளாகத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக் கப்பட்டுள்ளனர்.
என்ஐடி கல்லூரியில் உண்மை நிலைமை கண்டறிய நேற்று இரண்டு பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சு அனுப்பியது. மாணவர்களுடனும் கல்லூரி அதிகாரிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும், தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வெளிமாநில மாணவர்கள் வைத்த கோரிக்கையை கல்லூரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகக் கூறப் பட்டது. மேலும் உள்ளூரைச் சேர்ந்த விடுதிக் காப்பாளருக்குப் பதிலாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர் நியமிக்கப்பட் டுள்ளார். மாணவர்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதற்கு பாஜகதான் காரணம் என டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.