தமிழகச் சட்டமன்றத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து சந்திக்க முடிவெடுத் துள்ளார் ஜி.கே.வாசன். பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஓராண்டுக்கு முன்பு தமாகாவை தொடங்கிய ஜி.கே.வாசன், யாருடன் கூட் டணி அமைப்பது என்று முடிவு செய்யாமல் இருந்து வந்தார். முதலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார். ஆனால் வாசன் கேட்ட இடங்களை கொடுக்க அதிமுக தயாராக இல்லை. மேலும், இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட வலி யுறுத்தியதால் அதிருப்தி அடைந் தார் வாசன். அதிமுக கூட்டணியில் இணையும் முடிவை கைவிட்டார்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஏற்கெனவே அழைப்பு விடுத்த நிலையில், வாசனும் அவர்களுடன் சேருவது என முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து, ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் ஜி.கே.வாசனை, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அரை மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலு வலகத்தில் அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்தார் ஜி.கே.வாசன்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளை எதிர்த்து தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இணைந்து களமிறங்குகிறது. தேமுதிக 124 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 இடங்களிலும் போட்டியிடுவது என்று ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசும் இணைந்து உள்ளதால், இன்று மாமண்டூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தமாகாவுக்கு 26 இடங்கள் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியினருடன் ஜி.கே. வாசன் (வலமிருந்து மூன்றாவது). படம்: இணையம்