அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் சிங்கணாப்பூர் சனி பகவான் கோயில் கருவறைக்குள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக பெண்கள் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிபாட்டு முறையை சனிபகவான் கோயில் நிர்வாகம் மாற்றி அமைத்தது. இதையடுத்து போலிசாரின் பாதுகாப்புடன் பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையிலான குழுவினர் மட்டுமின்றி ஏராளாமான பிற பெண்களும் நேற்று முன்தினம் கோயிலின் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.
சிங்கணாப்பூர் சனி பகவான் கோயில் புனித மேடையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வரவேற்று உள்ளார். பெண்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டதை பாலின சமத்துவத்துகான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்புகள் வரவேற்றன. மகாராஷ்டிர மாநிலம், சிங்கணாப்பூரில் உள்ள சனி பகவான் கோயிலில் உள்ள புனித மேடையில் பெண்கள் ஏறுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதியளித்தது. அதையடுத்து புனித மேடை யில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கடந்த சில நூற்றாண்டுகளாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய மரபுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. சிங்கணாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த சனி பகவான் கோயிலுக்குள் உள்ள புனித மேடையில் பெண்கள் ஏறுவதற்கு இருந்த தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பினர் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
போலிசாரின் பாதுகாப்புடன் பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையிலான குழுவினர் மட்டுமின்றி ஏராளாமான பெண்களும் சிங்கணாபூர் கோயிலுக்குள் சென்று வழி பட்டனர். படம்: ஏஎஃப்பி