தர்மபுரி: தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தின்போது அமைச்சர் பழனியப்பன் அதிமுகவினராலேயே தாக்கப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இக்கூட்டம் தொடங்கியதுமே, அமைச்ச ருக்கு எதிராகச் சிலர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, அமைச்சருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் அவர்களில் சிலர் திடீரென மேடையேறி அமைச்சரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் பழனியப்பனைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்று, காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தன்னைத் தாக்கியவர்கள் மீது கட்சித் தலைமையிடம் புகார் அளிக்கப்போவதாக பழனியப்பன் தெரிவித்துள்ளார்.