சென்னை: முதல்வர் ஜெயலலிதா வுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் தம்மை அறவே பிடிக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும் அதிமுக வும் கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகங்கள் என்று வர்ணித்தார். "முன்பு நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர் தான். தமிழகத்தைக் கொள்ளை யடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தேர்தல் போர் நடக்க உள்ளது. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல்.
"இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயற்சிக்கிறார். ஸ்டாலினின் எண்ணங்களும் நோக்கங்களுமே அவரை அழித்து விடும்," என்றார் விஜயகாந்த்.