தடுமாற்றத்தில் உள்ளார் ஜெயலலிதா: கனிமொழி கடும் விமர்சனம்

சேலம்: தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களைக் கேட்டு, அவர்களின் தேவையை மனதிற்கொண்டே திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி (படம்) கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயம் காரணமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் இம்முறை தொகுதி மாறி போட்டியிடுவதாக தெரிவித்தார். "முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை எப்படித் தயாரிப்பது என்பதே தெரியாமல் தடுமாற் றத்தில் உள்ளார். அதிமுக ஆட்சியில்தான் இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. சசிகலாவின் மிடாஸ் மது பான ஆலையில் இருந்து 11,000 கோடிக்கு மதுபானம் வாங்கியது அதிமுக அரசு. "இது மக்களை ஏமாற்றும் ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது," என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!