விழுப்புரம்: சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியினரது விதி மீறல்கள் தொடர்ந்து நீடித்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், விதி மீறல்களைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாகத் தெரிவித்தார். "ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரிந்தால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறார்களா?
"அவ்வளவு ஏன்? 'அம்மா உத்தரவின் பேரில் மழை பெய்தது' என்ற கூறிய அதிகாரி கூட இன்னும் அதே இடத்திலேயே பணிபுரிகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணை யம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் தான் செயல்படுகிறது என்றுதானே அர்த்தம்," என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டிய காலம் வெகு விரைவில் வரும் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் மனித உரிமை மீறல்களும் நிகழ் வதாகச் சாடினார்.
விழுப்புரத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையைக் கேட்பதற்குத் திரண்ட மக்கள். படம்: அறிவாலயம்