வாட்டி எடுக்கும் வெயில் இந்தியாவில் ஏற்கெனவே நூற்றுக்கு மேற்பட்டோரைப் பலிகொண்டுள்ளது. இப்படி வெளியில் தலைகாட்ட முடியாதபடி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் இரண்டா வது முறையாக உயிரிழப்பு நேர்ந்தி ருப்பதால் மற்ற கட்சிகள் கொதித் தெழுந்துள்ளன. பக்கத்திற்கு ஐந்து என, இரு புறமும் குளிரூட்டிகள் ஓடியபடி இருக்க மேடையில் அமர்ந்து பேசும் ஜெயலலிதா பொதுமக்களின் நலன் குறித்து சிறிதும் அக்கறை கொள்வதில்லை என்பது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு.
கடந்த 11ஆம் தேதி விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் வெயில் தாங் காமல் இருவர் சுருண்டு விழுந்து பலியாகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் மகுடஞ்சாவடி யில் நடந்த அவரது பிரசாரக் கூட்டத்திலும் பச்சியண்ணன், 55, பெரியசாமி, 62, என்ற இருவர் உயிரிழந்தனர். சென்ற முறை போலவே இம் முறையும் உடல்நலக் குறைவால் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறி, தேர்தல் முடிந்தபின் அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக் கப்படும் என்று ஜெயலலிதா தெரி வித்துள்ளார். இந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் வெட்டவெளியில் பிர சாரக் கூட்டங்களை நடத்தும் அவரது போக்கை தமிழக எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.