புதுச்சேரி: புதுச்சேரியை ஆளும் தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைக்க முன் வராததால் புதுச்சேரியிலும் பாமக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தவிர அண்டை புதுச்சேரி மாநிலத்திலும் பாமக தலைமை கட்சியைப் பலப்படுத் தியது. கடந்த 2004ஆம் ஆண்டு அக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். ராமதாஸ் நாடாளுமன்றத் தேர்த லில் வெற்றி பெற்றார். பின்னர் அரியாங்குப்பம் தொகுதியில் பாமக மாநிலச் செயலாளராக இருந்த ஆர்கே. அனந்தராமன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப் பட்டார். இந்த நிலையில் தற்போது அனந்தராமன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.
அதன்பின் கோபாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளராக நியமிக்கப் பட்டார். இதற்கிடையே புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட பாமக முயற்சி செய்தது. முதல்வர் ரங்கசாமியிடம் தனது விருப்பத்தையும் பாமக தெரிவித்திருந்தது. ஆனால் பல நாட்களாக அதற்கு பதில் வர வில்லை. மேலும், பாமகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று என். ஆர். காங்கிரஸ் வெளிப்படையாகத் தெரிவித்தது.