தமாகா தேர்தல் அறிக்கையில் பக்கங்களைக் காணவில்லை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வௌயிட்டபோது, நடுவில் கொஞ்சம் பக்கங்களைக் காணவில்லை. தேனாம்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையின் நகல் செய்தியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அதில் இரண்டு பக்கங் களைக் காணவில்லை. இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "ஆமாம் உண்மைதான். அவசர, அவசரமாக அச்சிடப் பட்டது. நேற்று இரவுதான் அப்பணி முடிந்தது. காணாத பக்கங்களை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக் கிறோம்," என்றார் வாசன். தமாகா தேர்தல் அறிக்கையில் விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!