சென்னை: தமிழகத் தேர்தல் ஆணையம் புகாருக்கு ஆளான ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 18 பேரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மாற்றப்பட்டு அவ்விடத்திற்கு ராஜேந்திர ரத்னு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுப்புலட்சுமி மாற்றப்பட்டு அமித்குமார் சிங் என்பவர் புதிய காவல் கண்காணிப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை எஸ்.பி. ராஜேஸ்வரி மாற்றப்பட்டு சந்தோஷ் ஹதிமானி என்பவர் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி. லோகநாதனை மாற்றி பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் எஸ்.பி. மகேஸ் வரனை மாற்றி சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி. உமாவை மாற்றி நிஷா பார்த்திபன் புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலும் ஆட்சியர்களும் வருவாய்த்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.