4.5 லட்சம் பேரிடம் மனு பெற்ற திமுக: கனிமொழி தகவல்

காஞ்சிபுரம்: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது பலதரப்பு மக்களையும் சந்தித்து திமுகவினர் குறைகளைக் கேட்டறிந்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார். காஞ்சியில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட அவர், மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் திமுக மனுக்களை பெற்றுள்ளதாகக் கூறினார். "பொதுமக்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். எனவே அது திமுகவின் தேர்தல் அறிக்கை இல்லை. மக்களின் தேர்தல் அறிக்கை," என்றார் கனிமொழி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியால் மட்டுமே மீண்டும் நல்லாட்சியை வழங்க முடியும் என்றும், மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!