பணம் கொடுக்க உதவும் அலுவலர்கள்: பாஜக குற்றச்சாட்டு

சென்னை: அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலர்கள் சிலர் உதவி செய்வதாக பாஜக பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி பாஜக. தமிழகத்தில் மாற்று அரசியல் கலாச்சாரத்தை பாஜக கொண்டுவரும். "இந்த தேர்தலில் வாக்குகளுக்கு பணம் கொடுக்க தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலர்கள் சிலரும் உதவி செய்கின்றனர். ஓட்டுக்கு பணம் தரும்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் தேர்தலில் பணம் தந்தவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்," என்றார் இல.கணேசன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!