இந்தியக் கைபேசிகளில் அபாய அழைப்பு பொத்தான்

அடுத்த ஆண்டிலிருந்து இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைபேசிகளிலும் அபாய அழைப்புப் பொத்தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவில் பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் ஒரே அபாய அழைப்புப் பொத்தானை அழுத்துவதன் மூலம் அவசர சேவைகளை அழைக்க முடியும் என்று இந்திய தொலைத் தொடர்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார். 2017 ஜனவரி 1 முதல் இத்தகைய வசதி இல்லாத கைபேசியை விற்க முடியாது என்று பெயர் தெரிவிக்காத அந்த அதிகாரி சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!