தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மீண்டும் மீண்டும் திமுக, அதிமுகவுக்கே வாக்களித்தால் நாம் உருப்பட முடியாது," என்றார். இந்த இரு ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிந்தால் மட்டுமே தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்றும் அவர் சொன்னார். "கருணாநிதி கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தார். ஜெயலலிதா 15 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். ஆண்டுதோறும் 2,500 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு நீர்த் தேக்கமும் இவர்கள் ஆட்சியில் கட்டப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றை வழங்காத கடமை தவறிய அரசுகள்தான் அதிமுக, திமுக," என்று சீமான் குறிப்பிட்டார்.
திருப்பத்தூரில் நேற்றுப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய சீமான்.