புதுடெல்லி: மதுபோதையால் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கத் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 1,18,840 பேர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு இறந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் இதனைத் தடுக்கும்விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதுபோதையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் போக்குவரத்துப் போலிசாருக்கு மது சோதனைக்கருவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.