‘மது போதையால் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரிப்பு’

புதுடெல்லி: மதுபோதையால் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கத் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 1,18,840 பேர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு இறந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மேலும் இதனைத் தடுக்கும்விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதுபோதையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் போக்குவரத்துப் போலிசாருக்கு மது சோதனைக்கருவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!