‘ஹெலிகாப்டர் பேர ஊழலை விவாதிக்க தயங்குவது ஏன்?’

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு காங்கிரஸ் தயங்குவது ஏன் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங் களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பி­னார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசினார். "நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

ஆனால், நாடாளு மன்றத்தை முற்றுகையிடுவதை அவர்கள் விரும்புகின்றனர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக விவாதிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தயங்குவது ஏன் என்பதை அறிய விரும்புகிறேன்," என்று வெங்கய்ய நாயுடு கூறினார். இதற்கிடையே ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்கா சிங்கை விசாரிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!