‘சகாயத்தின் நேர்மையும் கொள்கையும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பிடிக்காது’

நாமக்கல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேர்மையாகச் செயல் படுவதும் அவரது கொள்கைகளும் திராவிட கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி களமிறங்குவது பிற கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார். "ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை ஏன் திமுக அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்றார். இது திமுகவுக்குப் பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்து என்றார். இது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை.

"அவரது கொள்கைகள் பலவும் இரு கட்சியினருக்குமே பிடிக்காமல் போய்விட்டது. எனவேதான் அவருக்கு எதி ராகத் திரும்பியுள்ளனர்," என் றார் சீமான். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கூட் டத்தைப் போன்றவை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தை மண்ணின் மக்களுக்காக ஆளக்கூடியவர்களே இப்போ தைய தேவை என்றார்.

"குண்டர்கள் ஆட்சி போல தமிழகத்தில் இப்போது ஆட்சி நடக்கிறது. இது மண்ணின் மக்களுக்கான ஆட்சியா என் றால் இல்லை. ஏனெனில் இங்கு மண்ணின் வளங்கள் களவு போகின்றன. கேரளாவில் ஆற்று மணல் அள்ள முடியாது. மணல் அள்ள அங்கு தடை உள்ளது. ஆந்திராவிலும் அதே நிலைதான். அதேபோல கர்நாட காவிலும் தடை இருக்கிறது. "ஆனால் தமிழகத்திலோ ஆற்று மணலை அள்ள வேண் டாம் என்று போராடினால் சிறை யில் போடுகிறார்கள். இதுதான் தமிழ் நாட்டின் நிலை," என்றார் சீமான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!