புதுடெல்லி: வருமானத்தை மிஞ்சிய அளவு சொத்து வாங்கிக் குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை. இந்த மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் மே 14ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஜூலை மாதம்தான் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ100 கோடி அபராதம் விதித்தார் பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு 20 நாட்களாக விசாரிக்கப்பட்டது. கோடைகால விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஆகையால் ஜூலை முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தேர்தலுக்குப் பிறகு தீர்ப்பு
7 May 2016 08:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2016 07:37
அண்மைய காணொளிகள்

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!