வெப்பம் தணித்த திடீர் மழை

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கி சென்னையில் கடந்த வாரம் வரை வாட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் தற்போது சற்றே குறைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந் தது. வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது கூறியி ருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கருமேகங்கள் சூழ்ந்தன.

தொடர்ந்து, சென்னையின் புறநகரான படப்பை, கும்மிடிப் பூண்டி, பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழை யால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல திருவண்ணாமலை மாவட்டம், கரூர் மாவட்டம், தேனி மாவட்டம் ஆகியவற்றின் பகுதிக ளில் கனமழை பெய்ததால் வெப்பத் தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. அமராவதி ஆறு நீரற்று வறண்டு கிடந்த நிலையில் திடீ ரென்று பெய்த மழையால் விவ சாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!