செங்கல்பட்டு: தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி, மிரட்டி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரி காட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வசிக்கும் மீனாட்சியின் மகன் வேலைக்குச் சென்றிருந்தபோது 3 வாலிபர்கள் கதவைத் தட்டித் தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுப்பதற்காக மீனாட்சி கதவைத் திறந்து வைத்து வீட்டுக்குள் சென்றார். திடீரென 3 வாலிபர்களும் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி நகை, பணம் கேட்டனர். ஆனால், மீனாட்சி கொடுக்க மறுத்ததால் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கொள்ளைக் கும்பல் மீனாட்சி அணிந்து இருந்த இரண்டரை பவுன் நகை, பீரோவில் இருந்து ஆறரை பவுன் நகையை எடுத்துத் தப்பிச் சென்றுவிட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை
9 May 2016 12:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 May 2016 07:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!