மன நோயாளிக்கு நச்சு ஊசி போட்டுக் கொலை

சென்னை: சென்னை அருகே கடந்த 2015ஆம் ஆண்டு 3 பேர் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்­யப்­பட்ட வழக்­கின் விசா­ரணை­யில், சோதனைக்­காக மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு ஊசி போட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­அதிர்ச்சித் தகவல் வெளி­யா­கி உள்­ளது. நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்­கத்தைச் சேர்ந்த­வர் ஸ்டீபன் (41). சொத்துச் சந்தை வர்த்­த­க­ரான இவர் தன் நண்ப ருடன் சேர்ந்து தனது மைத்­து­னர் ஜான் பிலோ­மி­னன், தான் தவறான உறவு வைத்­தி­ருந்த பெண்­களின் கண­வர்­கள் ஸ்ரீதர், ஹென்றி ஆகிய 3 பேரையும் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்தார்.

குடையின் நுனியில் நச்சு ஊசியைப் போட்­ட­தா­லும் இந்த நச்சு உடலில் நெஞ்சு வலிக்­கு­ரிய அறி­கு­றியை ஏற்­படுத்­தி­ய­தா­லும் மூவரும் நெஞ்சு வலியால் இறந்த­தாக அப்போது கூறப்­பட்­டது. இதற்­கிடையே, அண்மை­யில் ஸ்டீபன் வீட்டில் நடந்த ஒரு திருட்டு தொடர்­பாக காவல்­துறை­யி­னர் விசாரணை செய்­த­தில் இந்தக் கொலை குறித்த விவ­ரங்கள் வெளி­வந்தன. இதை­ ய­டுத்­து போலிசார், ஸ்டீபன், சதீஷ்­கு­மார், பாலாஜி, முரு­கா­னந்தம் ஆகிய 4 பேரைக் கைது செய்­த­னர். அவர்­களி­டம் நடத்­தப்­பட்ட விசா­ரணை­யில், போலி­சி­டம் சிக்­கா­மல் நூத­ன­மான முறையில் கொலை செய்வது எப்படி என்பதை இணை­யத்­த­ளம் மூலம் தெரிந்து கொண்ட ஸ்டீபன் அதற்­கான நச்சை மும்பை­யில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர், குடையின் நுனியில் ஊசியை வைத்து செலுத்­தும்­போது அது சரியாக செயல்­படு ­கிறதா என்பதை முதலில் தெரு நாய்­களின் மீது சோதனை செய்­துள்­ளார் ஸ்டீபன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!