சென்னை: சென்னை அருகே கடந்த 2015ஆம் ஆண்டு 3 பேர் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில், சோதனைக்காக மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டஅதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (41). சொத்துச் சந்தை வர்த்தகரான இவர் தன் நண்ப ருடன் சேர்ந்து தனது மைத்துனர் ஜான் பிலோமினன், தான் தவறான உறவு வைத்திருந்த பெண்களின் கணவர்கள் ஸ்ரீதர், ஹென்றி ஆகிய 3 பேரையும் நச்சு ஊசி போட்டுக் கொலை செய்தார்.
குடையின் நுனியில் நச்சு ஊசியைப் போட்டதாலும் இந்த நச்சு உடலில் நெஞ்சு வலிக்குரிய அறிகுறியை ஏற்படுத்தியதாலும் மூவரும் நெஞ்சு வலியால் இறந்ததாக அப்போது கூறப்பட்டது. இதற்கிடையே, அண்மையில் ஸ்டீபன் வீட்டில் நடந்த ஒரு திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் இந்தக் கொலை குறித்த விவரங்கள் வெளிவந்தன. இதை யடுத்து போலிசார், ஸ்டீபன், சதீஷ்குமார், பாலாஜி, முருகானந்தம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலிசிடம் சிக்காமல் நூதனமான முறையில் கொலை செய்வது எப்படி என்பதை இணையத்தளம் மூலம் தெரிந்து கொண்ட ஸ்டீபன் அதற்கான நச்சை மும்பையில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர், குடையின் நுனியில் ஊசியை வைத்து செலுத்தும்போது அது சரியாக செயல்படு கிறதா என்பதை முதலில் தெரு நாய்களின் மீது சோதனை செய்துள்ளார் ஸ்டீபன்.