திமுக, அதிமுகவுக்கு அடுத்த படியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதை உணர்த்தும் வகையில் இப்போது ஒரு புதிய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி. தனித்தனியாக கட்சிகளைப் பிரித்துப் பார்த்தால் இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உட்ளிட்ட பிற கட்சிகள் வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் 'உங்கள் வாக்கு யாருக்கு?' என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கருத்துக்கணிப்பை நடத்தி நேற்று முடிவை வெளியிட்டது புதிய தலைமுறை. இதில் வந்துள்ள முடிவுகள் சில எதிர்பார்க்கப்பட்டவைதான். சில எதிர்பாராதவை. எதிர்பாராதது வரிசையில் முக்கியமானது நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்துள்ள ஆதரவு. இந்தக் கட்சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியும் தலை தூக்கியுள்ளதாக இந்தக் கருத்துக்கணிப்புக் காட்டுகிறது.
உண்மையில் நியூஸ் 7 = தினமலர் கருத்துக் கணிப்பு ஒளிபரப்பானபோது அதில் பேசியவர்கள் மற்றவை என்பதில் 'நாம் தமிழர் கட்சி' முக்கியமாக உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் வெளிப்படையாக அக்கட்சியின் நிலையைத் தெரிவிக்கவில்லை. ஆனால் புதிய தலைமுறை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்த படியாக பாமக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதை உணர்த்தும் வகையில் இப்போது ஒரு புதிய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி. தனித்தனியாக கட்சிகளைப் பிரித்துப் பார்த்தால் இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் தேமுதிக, மதிமுக உட்ளிட்ட பிற கட்சிகள் வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் 'உங்கள் வாக்கு யாருக்கு?' என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கருத்துக்கணிப்பை நடத்தி நேற்று முடிவை வெளியிட்டது புதிய தலைமுறை. இதில் வந்துள்ள முடிவுகள் சில எதிர்பார்க்கப்பட்டவைதான். சில எதிர்பாராதவை. எதிர்பாராதது வரிசையில் முக்கியமானது நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்துள்ள ஆதரவு.
இந்தக் கட்சிக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியும் தலை தூக்கியுள்ளதாக இந்தக் கருத்துக்கணிப்புக் காட்டுகிறது. உண்மையில் நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு ஒளிபரப்பானபோது அதில் பேசியவர்கள் மற்றவை என்பதில் 'நாம் தமிழர் கட்சி' முக்கியமாக உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் வெளிப்படையாக அக்கட்சியின் நிலையைத் தெரிவிக்கவில்லை. ஆனால் புதிய தலைமுறை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. உங்கள் வாக்கு யாருக்கு என்று ஒரு கேள்வி. இதில் அதிமுக முதலிடத்தையும், திமுக 2வது இடத்தையும் பிடித்துள்ளன.
38.58% வாக்குகளுடன் 164 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியைத் தொடரப் போகிறது என்றும் 32.11% வாக்கு களுடன் திமுக 66 இடங் களையே பெறும் எனவும் கூறு கிறது இக் கருத்துக்கணிப்பு. என்டிடிவி கருத்துக் கணிப் பில் 143 இடங்களில் திமுக கூட்டணி வென்று ஆட்சியமைக்கும் என்றும் அதிமுக 70 இடங்களில் வெல்லும் எனவும் கூறுகிறது. அதிமுக வாக்கு வங்கியில் இருந்து சுமார் 7% திமுக கூட்டணிக்குச் செல்லும் என்கிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பில் மக்கள் நலக் கூட்டணி அதாவது தேமுதிக அணி 3வது இடத்திலும் பாமக நான்காவது இடத்திலும் உள்ளன. இது எதிர்பார்த்ததுதான். ஆனால் 'நாம் தமிழர் கட்சி' 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அதைவிட முக்கியமாக பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. பாஜகவுக்கு 6வது இடம். இதில் கட்சிகள் அடிப்படையில் பிரித்துப் பார்த்தால் திமுக, அதிமுக நீங்கலாக 'நாம் தமிழர் கட்சி' மக்களின் மனதில் நான்காவது இடத்தில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்குக் கிடைத்துள்ள ஆதரவு 8.55%. பாமகவின் ஆதரவு 4.47%. நாம் தமிழருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 2.12%.