புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி (படம்) அவசர உதவிக்கான எண் 100ஐ அழைத்து மறுபுறம் எந்த பதிலும் கிடைக்காமல் போனதை அடுத்து அவர் டெல்லி போலிஸ் ஆணைய ருக்குக் கடிதம் எழுதியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ரோஹினியும் அந்தக் கடிதத்தில் அவசர எண் 100ஐ அழைத்தால் ஒரு பதிலும் கிடைப்பதில்லை, அல்லது காக்க வைக்கிறார்கள் எனும் அதே கருத்தைத் தனது அனுபவத்தின் வாயிலாகக் கூறி இருந்தார். ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நீதிபதி விபின் சங்கி, வசந்த் குஞ்ச் பகுதியை நோக்கிச் செல்லும்போது மிகக் கடுமையான வாகன நெரிசலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது.
"வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலிசார் யாரும் அங்கே இல்லை. "ஆகவே, இரவு 10.12 மணிக்கு போலிசா ருக்கு தகவல் கொடுக்க எண்ணி அவசர எண் 100ஐ அழைத்தேன். "எனினும், யாரும் மறுபுறம் எடுக்கவில்லை. ஐந்து நிமிடங் கள் காத்திருந்தும் ஒரு பலனு மில்லை. 100 அவசர எண் என்று பெயர். ஆனால், ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகும் மறுபுறம் தொலைபேசியை எடுக்கவோ பதிலளிக்கவோ யாருமில்லை," என்று போலிசுக்கு எழுதிய அந்தப் புகார் கடிதத்தில் விபின் சங்கி எழுதியிருந்தார். அவர் 100ஐ அழைத்து பதில் கிடைக்காததால் அது குறித்து போலிஸ் உயர் அதிகாரி அலோக் குமாருக்கு நீதிபதி எழுதிய கடிதத்தில் 'மிக மோசமான அனுப வம்' என்று கூறி இருந்தார்.