அமைச்சர் மீது காலணிகள் வீசிய இளையர்கள்

கடலூர்: அமைச்சர் சம்பத் மேற்கொண்ட பிரசாரத்தின் போது அவர் மீது காலணிகள் வீசப்பட்டதால் கடலூரில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் திறந்த வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தபோது, இரு இளையர்கள் அவர் மீது காலணிகளை வீசினர். "ஐந்தாண்டுகளாக தொகுதிப் பக்கம் ஏன் வரவில்லை? ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?" என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இருவரையும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் சம்பத் அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றார். எனினும் அவ்விரு இளை யர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!