சென்னை: சென்னையில் திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. வழக்கமாக தங்குபவர்களைத் தவிர வேறு யாரே னும் தங்கியுள்ளனரா என ஒவ்வொரு விடுதியிலும் நேற்று முன்தினம் இரவு போலிசார் விசாரணை நடத்தினர்.
புதிதாக தங்கியுள்ளவர்கள் குறித்து பதிவேட்டில் குறித்துக்கொண்ட னர். தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு துணை கண்காணிப் பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில வாகனத் தணிக்கையும் நடத்தப்பட்டது.