தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை விடுவித்தது

சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேன பிறப்பித்துள்ளார். ராமேசுவரம் மீனவர்களை கடந்த ஏப்ரல் 4, 27ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனவிடம் மீனவர்களை விடுவிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதை அதிபர் சிறிசேன ஏற்றுக்கொண்டதையடுத்து, மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். ஓரிரு நாட்களில் மீனவர்கள் தமிழகம் திரும்ப உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!